இலங்கைசெய்திகள்

அழைத்தார் மோடி : புதுடெல்லி பறந்தார் ரணில்

Share
24 66653544c6527
Share

அழைத்தார் மோடி : புதுடெல்லி பறந்தார் ரணில்

இந்தியப் பிரதமராக மூன்றாவது தடவையாக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி(Narendra Modi)யின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe )சற்றுமுன்னர் புதுடெல்லிக்கு பயணித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அதிபர் ரணில் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று (09) மாலை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி பதவியேற்கிறார், அத்துடன் புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு 3 முறை பிரதமராக பதவி வகிக்கிறார் மோடி.

இதில் ஆயிரக்கணக்கான அரசு தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு(Droupadi Murmu) பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் ராஷ்டிரபதி பவனில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்காக டெல்லி அதிக உஷார் நிலையில் இருப்பதால், டெல்லி காவல்துறையின் SWAT மற்றும் NSG இன் கொமாண்டோக்கள் முக்கிய இடங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

44 நாட்கள் 7 கட்டங்களாக நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...