24 66456eaae0fe7
இலங்கைசெய்திகள்

இந்தியாவின் போன்பே யுபிஐ கட்டண செயல்முறை இலங்கையில்

Share

இந்தியாவின் போன்பே யுபிஐ கட்டண செயல்முறை இலங்கையில்

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று(15.05.2024) நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santosh Jha) ஆகியோர் கலந்து கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினத்திலிருந்து லங்காபேயுடன் இணைந்து இலங்கையில் UPI கட்டணத்தை ஏற்றுக்கொள்வதைச் செயற்படுத்தியதாக PhonePe அறிவித்துள்ளது.

இதன்மூலம் இலங்கைக்கு வருகை தரும் தமது செயலி பயனர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள LankaPayQR வணிகர்கள் மூலம் UPIஐப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என்று போன்பே அறிவித்துள்ளது.

அத்துடன் PhonePe பயனர்கள் ரொக்கத்தை எடுத்துச் செல்லாமல் அல்லது நாணய மாற்றங்களைக் கணக்கிடாமல் பாதுகாப்பான மற்றும் விரைவான பணம் செலுத்த LankaPayQR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் என்றும் PhonePe அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரியில், இந்தியாவின் உடனடி கட்டண தொழில்நுட்ப சேவையான யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் UPI இலங்கை மற்றும் மொரீசியஸில் ஆரம்பிக்கப்பட்டது.

இது தொடர்பான காணொளி மாநாட்டு நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

UPI என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான வேகமான கட்டண முறையாகும். இது வாடிக்கையாளர் உருவாக்கிய விர்ச்சுவல் பேமென்ட் முகவரியை (VPA) பயன்படுத்தி 24 மணிநேரமும் உடனடியாக பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...