24 663c4ab70d724
இலங்கைசெய்திகள்

சீனாவை கட்டுக்குள் கொண்டு வர இந்தியாவை பயன்படுத்தும் ரணில்

Share

சீனாவை கட்டுக்குள் கொண்டு வர இந்தியாவை பயன்படுத்தும் ரணில்

இலங்கை முழுவதும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) நிர்வாகம் வெளிப்படையாகவே முக்கிய திட்டங்களுக்கு இந்திய நிறுவனங்களை அதிகளவில் ஈடுபடுத்துகிறது என ஜப்பானை தளமாகக்கொண்ட ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

சீன நிதியுதவியுடன் கட்டப்பட்ட மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் (Mattala Rajapaksa International Airport) நிர்வாகத்தை இந்திய-ரஸ்ய கூட்டுக் கட்டுப்பாட்டுக்கு வழங்கியதை மையப்படுத்தியே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த செவ்வாயன்று இலங்கை அரசாங்கம் இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜியுடன் (India’s Adani Green Energy) 20 வருட மின்சார கொள்முதல் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது வடக்கில் மன்னார் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை 484 மெகாவோட்களை உருவாக்க 442 மில்லியன் டொலர்களை கொண்டு வரும்.

முன்னதாக இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானியின் (Gautam Adani) குழு இலங்கையில் இந்த திட்டத்தை மாத்திரமல்லாமல் 2021ஆம் ஆண்டில் கொழும்பில் 700 மில்லியன் டொலர் துறைமுக முனையத் திட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் இதற்காக 553 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அண்மைய ஆண்டுகளில் தெற்காசியா முழுவதும் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டு முயற்சித்து வருவதை பலர் நம்புவதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...