24 662f1044ed3f9
இலங்கைசெய்திகள்

தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் எச்சரிக்கை

Share

தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் எச்சரிக்கை

தேயிலை பெருந்தோட்டத்துறை வங்குரோத்து அடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொசான் ராஜதுரை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

உற்பத்தி வினைத்திறனை அடிப்படையாகக் கொண்ட சம்பள அதிகரிப்பு முறைமையே உசிதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உற்பத்தி வினைத்திறனை கருத்திற் கொள்ளாத சம்பள அதிகரிப்புக்கள் ஒட்டுமொத்த பெருந்தோட்டத்துறையை வங்குரோத்து அடையச் செய்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் நாளொன்றுக்கு சுமார் இரண்டாயிரம் ரூபா சம்பளம் ஈட்டக்கூடிய யோசனை ஒன்றை தமது சம்மேளனம் முன்மொழிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முன்மொழிவானது உற்பத்தி வினைத்திறனை அடிப்படடயாகக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டாக இணைந்து கிரமமான ஓர் முறையின் கீழ் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...