24 660778a595a50
இலங்கைசெய்திகள்

குடல் வெடித்து இளைஞர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில் காரணம்

Share

குடல் வெடித்து இளைஞர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில் காரணம்

தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது ஆசனவாய் மூலம் ஆபத்தான சுவாச காற்றினை செலுத்தி குடல் வெடித்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை, அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (25 ஆம் திகதி) பிற்பகல், குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் தனது இரு நண்பர்கள் கேலியாக உயிரிழந்த இளைஞனின் ஆசனவாயில் சுவாசக் குழாயைப் பிடித்துள்ளனர்.

இதன்போது, குறித்த இளைஞர் குடல் வெடித்து உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற (29ஆம் திகதி) பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை வசிப்பவர்கள் என்பதுடன் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொ.ச. குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி ஒசித லங்கா டி சில்வாவின் பணிப்புரையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share
தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...