24 660778a595a50
இலங்கைசெய்திகள்

குடல் வெடித்து இளைஞர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில் காரணம்

Share

குடல் வெடித்து இளைஞர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில் காரணம்

தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது ஆசனவாய் மூலம் ஆபத்தான சுவாச காற்றினை செலுத்தி குடல் வெடித்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை, அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (25 ஆம் திகதி) பிற்பகல், குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் தனது இரு நண்பர்கள் கேலியாக உயிரிழந்த இளைஞனின் ஆசனவாயில் சுவாசக் குழாயைப் பிடித்துள்ளனர்.

இதன்போது, குறித்த இளைஞர் குடல் வெடித்து உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற (29ஆம் திகதி) பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை வசிப்பவர்கள் என்பதுடன் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொ.ச. குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி ஒசித லங்கா டி சில்வாவின் பணிப்புரையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...