tamilni 324 scaled
இலங்கைசெய்திகள்

பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு புதிய பொறுப்பு

Share

பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு புதிய பொறுப்பு

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கீழ், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப்பிரிவு, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப்பிரிவு என்பன தற்போது இணைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை காலமும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் தனியாக இயங்கி வந்தது.

பொலிஸ் திணைக்களத்தின் வேறு எந்தவொரு பிரிவுடனும் குற்றப்புலனாய்வுப் பிரிவு இணைக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு இணைந்து செயற்படுவதற்கான சூழல் இதுவரை ஏற்படவும் இல்லை.

இந்நிலையிலேயே இவ்வாறு இரு பிரிவுகளும் பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப்பிரிவு, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப்பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள், இனிவரும் காலங்களில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இயங்க வேண்டியேற்பட்டுள்ளது.

இதற்கான பணிப்புரையை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...