tamilni 155 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

Share

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

2024 வரவு செலவுத்திட்டத்துடன் பல துணை ஆவணங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச நாணய நிதிய திட்டத்தில், இலங்கையின் தற்போதைய வெளிப்படைத்தன்மை கடந்த நவம்பர் மாதம் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக வெளியிடப்பட்ட வெரைட்டின் (Verite Research) ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ‘தெரியாதது’ என வகைப்படுத்தப்பட்ட ஆறு அர்ப்பணிப்புக்களின் முன்னேற்றம் குறித்த தகவல்களை துணை ஆவணங்கள் வழங்கியுள்ளன.

இதில் ஐந்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 ஆவது பொறுப்பான வரி வருவாய் இலக்கு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

2024 நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டிய 73 அர்ப்பணிப்புக்களில் 12 ‘நிறைவேற்றப்படவில்லை, 15 ‘தெரியாதவை’ மற்றும் 46 நிறைவேற்றப்பட்டுள்ளது என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி அர்ப்பணிப்புக்களில் 63 சதவீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எனினும் இந்த வகைப்படுத்தல், இலங்கையின் ஒட்டுமொத்த செயல்திறன் ஈர்க்கக்கூடியதை விட குறைவாகவே உள்ளது என்பதையே காட்டுவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.

இதேவேளை சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் இரண்டாம் தவணையான சுமார் 330 மில்லியன் டொலர்களை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 12ஆம் திகதி வாக்களிக்கவுள்ளது.

Share
தொடர்புடையது
14 7
இலங்கைசெய்திகள்

வடக்கில் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படக்கூடாது! பொன்சேகா

வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள்...

13 9
இலங்கைசெய்திகள்

யாழில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு...

11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...