இலங்கை
தலைவர் பிரபாகரன் காண்பித்த ஆயுதப் பட்டியல்!
தலைவர் பிரபாகரன் காண்பித்த ஆயுதப் பட்டியல்!
கடைசி நிமிடம் வரை களமுனையில் நின்று தப்பித்து இன்றும் உயிருடன் இருக்கின்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முக்கியமான தளபதியின் கருத்தை இன்றைய இந்த நிகழ்ச்சியில் பதிவுசெய்து இருக்கின்றோம்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் காட்சிகள் பற்றியும், வெளியே தெரியாமல் அங்கு நடைபெற்ற பல சம்பவங்கள் பற்றியும், அவர் தனது அனுபவத்தை இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கின்றார்.
தற்பொழுது பெரும் பேசுபொருளாயுள்ள துவாரகா விடயத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள போராளிகள் சரியானமுறையில் எதிர்வினையாற்றவில்லை என்றும், அந்தச் சதியை முறியடிப்பதற்கு போராளிகள் எதுவுமே செய்யவில்லை என்றும் பல தரப்புக்களாலும் எழுப்பப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்களுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அவரது குடும்பமும் விரைவில் வெளிவரப்போகின்றார்கள் என்று ஒரு சில தரப்புக்களால் கூறப்பட்டுவருவது பற்றியும் அந்த தளபதி தெரிவித்த கருத்துக்களைச் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்: