rtjy 45 scaled
இலங்கைசெய்திகள்

இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள சம்பா

Share

இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள சம்பா

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சம்பா அரிசி ஒருதொகை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

50,000 மெட்ரிக் தொன் சம்பா அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த இறக்குமதி மேற்கொள்ளப்படுவதாக அரச வர்த்தக பொது கூட்டுத்தாபன தலைவர் ஆசிரி வலிதுந்தர தெரிவித்துள்ளார்.

சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கான கேள்விப்பத்திரம் கோரும் நடவடிக்கை நேற்றுமுன் தினம் நிறைவடைந்ததாகவும், இதனையடுத்து அரிசி இருப்பு இந்தியாவிலிருந்தே கொள்வனவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான சோதனைகள் தொடரும் என நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

அரிசியை அதிக விலைக்கு விற்ற 1,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...