rtjy 213 scaled
இலங்கைசெய்திகள்

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்து அமைச்சர் தகவல்

Share

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்து அமைச்சர் தகவல்

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்த இறுதி தீர்மானம் இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,உத்தேச 18% பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு பயனுள்ளதாக இருக்காது.

எவ்வாறாயினும் மண்ணெண்ணெய் மற்றும் டீசலுக்கு வற் வரியில் இருந்து விலக்கு அளிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவை உபகுழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதுடன் அடுத்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் செயற்பாட்டுக்கு வந்தவுடன் இலங்கை பெற்றோ -இரசாயனங்கள் மற்றும் பெற்றோலிய பொருட்கள் ஏற்றுமதிக்கு செல்லும்.

மேலும், இலங்கையில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் ,பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், பிரதேச மற்றும் மாவட்ட செயலக அலுவலகங்கள் என 27,000 இடங்களுக்கு ஒரு வருடத்திற்குள் சோலார் பேனல்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...