tamilni 149 scaled
இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் மீதான தடையை நீக்க முயற்சி

Share

கிரிக்கெட் மீதான தடையை நீக்க முயற்சி

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் சபை மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட், மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனம் என்பதை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஏற்றுக்கொள்கிறார்கள் என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இதனை தேசிய பிரச்சினையாக கருதி இலங்கை கிரிக்கெட் சபையில் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் எதிர்கட்சி உறுப்பினர்களும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.

இது அரசியல் தலையீடு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கையில் கிரிக்கெட்டுக்கு தடை விதித்ததாக “கிரிக்இன்போ” இணையத்தளம் உட்பட பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், கிரிக்கெட் தலைவர் இவ்வாறான கோரிக்கையை விடுத்திருந்தால் அது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும் எனவும், அதற்கு பொறுப்பான அமைச்சர் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...