tamilni 161 scaled
இலங்கைசெய்திகள்

தீபாவளி தினத்தில் ஜனாதிபதியின் வேண்டுகோள்

Share

தீபாவளி தினத்தில் ஜனாதிபதியின் வேண்டுகோள்

இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் நாட்டுக்காகவும், சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் எனவும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த வாழ்த்துச் செய்தியில்,

உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடத்தை வகிக்கிறது. எமது மனதுக்குள்ளே இருக்கும் தீய எண்ணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் இந்துக்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

விஷ்ணு பகவானால் நரகாசுரன் தோற்கடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதோடு, தனக்கு ஞான ஒளி கிட்டியது போல உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒளிகிட்ட வேண்டும் என நரகாசுரன் விஷ்ணு பகவானிடத்தில் வேண்டியதாக கூறப்படுகிறது.

அதை நினைவுகூரும் வகையில், அனைவரது மனங்களிலும் ஒளி பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனேயே இந்து பக்தர்கள் விளக்கேற்றி சமய வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

நாடு என்ற வகையில் நாம் கடந்த இரு வருடங்களில் எதிர்கொண்டிருந்த இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் நாட்டுக்காகவும், சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் எனவும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.

நாட்டில் சுபீட்சத்தின் தீபங்களை ஏற்றி, இலங்கையை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும், பல்லின மக்களுக்கு மத்தியில் சமாதானம், சகவாழ்வு, நித்திய நல்லிணக்கத்துடன் கூடிய ஆன்மிக வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த தீபாவளி பண்டிகை வரப்பிரசாதமாக அமைய வேண்டும் என நான் பிரார்த்திப்பதோடு அனைவர் வாழ்விலும் இன்பமும் நலமும் உண்டாக பிரார்த்திக்கிறேன்.

இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்து பக்தர்களுக்கும் இருளை அகற்றி ஒளி பிறக்க தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...