tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு

Share

முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு அவர் கோரியுள்ளார்.

புதிய நிர்வாகக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாகக்குழு நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் கடமைகள் பொறுப்புகளை நிறைவேற்ற தவறியமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, புதிய இடைக்கால நிர்வாகக் குழுவை நியமித்துள்ளதாக குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...