tamilni 18 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு நோக்கி வந்த ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம்

Share

கொழும்பு நோக்கி வந்த ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம்

தெமோதர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மீது மரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக நேற்று இரவு மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டது.

எனினும் அப்போது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தெமோதர நிலையத்தை அடையவிருந்த நிலையில் ரயில் பரிசோதகரின் அவதானிப்பு காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குறித்த மரம் முறிந்து விழும் நிலையில் இருந்ததைக் கண்ட வீதி பரிசோதகர், உடனடியாக இது தொடர்பில் தெமோதர ரயில் நிலைய அதிபருக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட ரயில் நிலைய அதிபர், ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு உரிய சமிக்ஞைகளை வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். பின்னர், அந்த இடத்தைச் சரிபார்க்க சென்றபோது, ​​குறித்த மரம் முறிந்து விழுந்தது. இதனால், பெரும் விபத்து தவிர்க்க முடிந்தது.

பின்னர், ரயில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டு, ரயில் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர், ரயில் கொழும்புக்கு இயக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...