இலங்கை
வெளிநாட்டு சந்தையில் இலங்கை இளநீருக்கு கேள்வி
வெளிநாட்டு சந்தையில் இலங்கை இளநீருக்கு கேள்வி
இலங்கை இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த வருடம் இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தரவுகளை வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு 11 மில்லியன் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டு 110 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வருடம் இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள இளநீரின் தொகை 14 மில்லியன் எனவும் இதன் மூலம் கிடைத்த வருமானம் 140 மில்லியன் ரூபா எனவும் அதிகாரசபை கூறியுள்ளது.