rtjy 22 scaled
இலங்கைசெய்திகள்

ஏழு நாட்டவர்களுக்கு இலவச விசா: சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு

Share

ஏழு நாட்டவர்களுக்கு இலவச விசா: சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு

விசா இல்லாமல் இலங்கைக்கு வர ஏழு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் நடைமுறை, நவம்பர் 07 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டத்தில் திருத்தங்களுடன் நவம்பர் 06 இல், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த நடைமுறைக்கு அங்கீகாரம் பெறப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு விசா இல்லாமல் இலங்கைக்கு பிரவேசிக்க கடந்த மாதம் 23 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இந்த விடயத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது எக்ஸ் தள பதிவின் மூலம் உறுதி செய்ந்திருந்தார்.

இதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இன்றி இலங்கைக்கு பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...