rtjy 21 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையை தொடர்ந்து இந்தியர்களுக்கு விசா சலுகை வழங்கும் நாடு

Share

இலங்கையை தொடர்ந்து இந்தியர்களுக்கு விசா சலுகை வழங்கும் நாடு

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கோடு, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் தாய்லாந்தில் தங்கலாம் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பயணிகள் தாய்லந்திற்கு வருகின்ற நிலையில் வெளிநாடுகளிலிருந்து அதிக சுற்றுலா பயணிகளை கவரும் முயற்ச்சியாக இந்தியா மற்றும் தைவான் குடிமக்களுக்கு விசா சேவையை தாய்லாந்து அரசு வழங்கியுள்ளது.

அதன்படி இந்தியர்கள் விசா பெறாமலே 30 நாட்கள் வரை தாய்லந்தில் தங்கலாம் எனவும் இந்த வருடம் நவம்பர் 10 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் மே 10ஆம் திகதி வரை இந்த விசா சலுகை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவுக்கு விசா தள்ளுபடியை அறிவித்திருக்கும் 2வது நாடாக தாய்லாந்து அமைந்துள்ளது. இதற்கு முன் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை விசா இல்லாத நுழைவை அனுமதிப்பதாக இலங்கை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீ பாத கேபிள் கார் திட்டம்: சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை என சிஇஏ விளக்கம்

ஸ்ரீ பாத (ஆதாம் சிகரம்) மலைத் தளத்தில் கேபிள் கார் திட்டத்தை அமைப்பதற்கு இதுவரை எந்தவிதமான...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் ஜூன் 30 முதல் தண்ணீர்க் கட்டணத் திருத்தம்: அமைச்சர் சுசில் ரணசிங்க தகவல்

இலங்கையில் தண்ணீர்க் கட்டணங்களின் அடுத்தக்கட்ட திருத்தம் வரும் ஜூன் மாதம் 30-ம் திகதி மேற்கொள்ளப்படும் என...

world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...