rtjy 298 scaled
இலங்கைசெய்திகள்

ஜேர்மன் கடற்பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்து

Share

ஜேர்மன் கடற்பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்து

ஜேர்மனிக்கு அருகில், வட கடல் பகுதியில், இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு கப்பல் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“பொலேசி” மற்றும் “வெரிட்டி” என்னும் இரண்டு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், “வெரிட்டி” கப்பல் மூழ்கியிருக்கலாம் என ஜேர்மன் தரப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய சரக்குக் கப்பலான “வெரிட்டி” , ஜேர்மனியின் பிரேமன் என்னுமிடத்திலிருந்து, இங்கிலாந்திலுள்ள இமிங்ஹம் துறைமுக நகரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே “பொலேசி” என்னும் பஹாமாஸ் நாட்டுக் கப்பல், ஜேர்மனியின் ஹாம்பர்கிலிருந்து, ஸ்பெயினிலுள்ள லா- கொருணா துறைமுகம் நோக்கி பயணித்துள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் மாத்திரம் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், காணாமல் போன ஏனையவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், “பொலேசி” கப்பல், 22 பணியாளர்களுடன் கடலில் மிதந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....