rtjy 60 scaled
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சின் வெற்றிடங்களை நிரப்ப யோசனை

Share

கல்வி அமைச்சின் வெற்றிடங்களை நிரப்ப யோசனை

கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்ப முடியும் எனவும் அதற்கான நிதியை இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(05.10.2023) வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரிணி அமரசூரிய எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

”நாட்டில் பத்து பட்டப்பின் படிப்பு நிறுவனங்கள் உள்ளன. அவை பாடங்களுக்கான கட்டணத்தை அறவிட்டே கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

எனினும் அரசாங்கமும் அவற்றுக்கு நிதியை வழங்குகிறது. தற்போதைய பிரச்சினை என்னவெனில் நாட்டில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல என்பதாகும்.

இதில் இரண்டு பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஒன்று நிதி ஒதுக்குதல் மற்றது தட்டுப்பாடு. அந்த வகையில் கல்விசார் ஊழியர்களுக்கான 1054 வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலம் அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஓய்வு பெற்றுள்ளவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் அதில் மேலும் 126 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அடுத்த வருடத்திற்காக அதனை பெற்றுக் கொள்வதற்கு வரவு செலவு திட்டத்திற்கு யோசனைகள் என்னால் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன் மூலம் கல்வித்துறை சார்ந்த வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்ப முடியும்.

அதனைத் தவிர தொழில்நுட்ப உதவியாளர்கள் போன்ற கல்வி சாரா ஊழியர்களின் வெற்றிடங்களும் நிலவுகின்றன.

அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக நிதியைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில் வரவு செலவு திணைக்களத்திற்கு நாம் அறிவித்துள்ளோம். அடுத்த வருடத்தில் அந்த வெற்றிடங்களை நிரப்ப அதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்.

எவ்வாறெனினும் ஒவ்வொரு நிறுவனங்களும் அந்த நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளும் வருமானத்திலிருந்து தற்காலிகமாக இந்த வருடத்திற்கான குறித்த நிதியை அதன் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image acfd8193e8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரகரி வாவியில் விழுந்த நீர் விமானம் மீட்பு: கடும் சேதங்களுக்கு மத்தியில் கரைக்கு கொண்டு வரப்பட்டது!

நுவரெலியா கிரகரி வாவியில் (Gregory Lake) கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளான நீர் விமானம் (Sea Plane),...

26 6961d3a5f270c
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 2,500 மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்: மருந்தாளர் தட்டுப்பாட்டால் உரிமம் ரத்தாகும் எச்சரிக்கை!

இலங்கையில் தகுதிவாய்ந்த மருந்தாளர்களை (Qualified Pharmacists) முழுநேரமாகப் பணியமர்த்த முடியாத காரணத்தினால், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட...

gagenthirakumar
செய்திகள்அரசியல்இலங்கை

அவதூறு பிரசாரத்தை ஏற்க முடியாது: கொள்கை வேறுபாடு இருந்தாலும் பிரதமருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கஜேந்திரகுமார்!

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியாவுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்களை,...

24503320 09012026ayatollahalikhamene
உலகம்செய்திகள்

அகங்கார ஆட்சியாளர்களுக்கு வீழ்ச்சி உறுதி: டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி கடும் எச்சரிக்கை!

ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள...