tamilni 29 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை!

Share

இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை!

இலங்கை புலனாய்வுத் துறையை விட, வேறொரு புலனாய்வுத் துறை உள்ளுக்குள், மிக வேகமாக, காத்திரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜாவை நாட்டில் இருந்து வெளியேற்றுவதில் இந்த புலனாய்வுத் துறை, இலங்கை புலனாய்வுத் துறையை முறியடித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையின் புலனாய்வுத் துறைக்கு உள்ளேயே மற்றொரு புலனாய்வு கட்டமைப்பு வலுவாக செயற்படுகின்றது.

அந்த புலனாய்வுத் துறை என்பது இலங்கை அரசினுடைய புலனாய்வுத் துறையை விட வேகமாக செயற்படுகின்றது என்றால் இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்துள்ளார்கள் என்று அர்த்தம்.

நீதிபதி சரவணராஜா கண்காணிக்கப்பட்டதை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்றும் கலாநிதி அரூஸ் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
hgfn
இலங்கை

வெள்ள அபாயம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த...

vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...

பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...