tamilni 38 scaled
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விசாரணைகளை முன்னெடுக்க 2 குழுக்கள்

Share

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விசாரணைகளை முன்னெடுக்க 2 குழுக்கள்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, குறித்த விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இரு குழுக்கள் இன்று(03.10.2023) குறித்த முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தலுக்கு எதிராக நேற்று ஆரம்பித்த காலவரையறையற்ற தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

மேலும் நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பரஞ்சோதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....