rtjy 209 scaled
இலங்கைசெய்திகள்

தனித்தீவில் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்…!!

Share

தனித்தீவில் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்…!!

யுத்தம் முடிந்து சரியாக ஒரு வருடத்தின் பிறகு கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு ஐரோப்பிய வட்டகையில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தான் பொட்டமானைச் சந்தித்ததாகவும், அவரை சந்தித்த வேளை தூரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார் என கனடாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய வட்டகையில் தமிழ் செயற்பாட்டாளர்களுள் ஒருவர் கூறினார், தான் ஒரு தீவுக்கு அழைக்கப்பட்டதாகவும், அந்த தீவிற்கு தான் செல்லும் போது அங்கு பொட்டம்மான் தான் என்னுடன் பேசினார். தலைவர் அல்ல, அவர் தள்ளியிருந்தார். அவரை நான் சந்திக்கவில்லை, பொட்டம்மன் என்னென்ன விடயங்களை செய்ய வேண்டும் என சொல்லிவிட்டிருக்கின்றார் என்று.

இந்த தகவலை அவர் பரிமாறியபோது, இதனுடைய உண்மைத் தன்மையினைத் தாண்டி, இதனை யார் சொல்ல வைக்கிறார்கள் என்று தேடிய போது அவர் இந்திய வட்டகைக்குள் இருப்பது தெரியவந்தது.

அதன் பிறகு நீண்டதொரு இடைவெளி, பின்னர் அண்மையக் காலங்களில் விடுதலைப் புலிகளினுடைய தலைவர் உயிருடன் இருக்கின்றார் என செய்தி பரவி வருகின்றது எனவும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதில் ஒரு மாற்றம்.. விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கின்றார். ஆனால் செயற்பட முடியாதவராக இருக்கின்றார். அடுத்தக் கட்டத்திற்கு அவரது மகளை முன்னகர்த்திச் செல்லும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் என குறிப்பிடுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாட்டுக்குள் சவாலுக்கு உரியவர்கள் வருகின்றார்கள் என்றால், அவர்களை உள் அனுமதிப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வது அந்த நாட்டினுடைய தேசிய புலனாய்வுத் துறை.

ஏனெனில் அவர்களுக்கு தெரியாமல் இது போன்ற விடயங்கள் நடைபெறுமானால் அது அந்த நாட்டினுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...