tamilni 159 scaled
இலங்கைசெய்திகள்

விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

Share

விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட இடமாற்ற விண்ணப்பத்தில் சசி வீரவன்ச, தமது வழக்கு விசாரணையில், கொழும்பு பிரதான நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருப்பதாக குறிப்பிட்டு, வழக்கை வேறு எந்த நீதவானுக்கும் மாற்ற உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

இரண்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சசி வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி, முதலாவது வழக்கில் சசி வீரவன்ச குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...