rtjy 105 scaled
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

Share

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் விசேட பாதுகாப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது நேற்று(10.09.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையிலான குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது 4000க்கும் மேற்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக இந்த இரண்டு மாகாணங்களிலும் முக்கியமான பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படை, குற்றப் புலனாய்வுத் துறை, அரச புலனாய்வு சேவை , பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பிற பொலிஸ் பிரிவுகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...