இலங்கைசெய்திகள்

நீதிமன்றத்தை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் : சஜித்

tamilni 70 scaled
Share

நீதிமன்றத்தை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் : சஜித்

நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழிக்கும் வகையில் ஜனாதிபதி தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கையை நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதிகள் கூட பகிரங்கமாக விமர்சித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசு நீதிமன்றத்தின் மீது பல்வேறு அச்சுறுத்தல்கள், பல்வேறு குறுக்கீடுகள், அழுத்தங்கள் போன்றவற்றைச் செய்வதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்கள் இறைமைக்காக வலுவான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கு நீதிமன்றமும் நீதிபதிகளும் முன்நின்றமைக்கு நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் மீதான இந்த வெட்கமற்ற செயலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நீதித்துறையில் செலுத்தப்படும் ஒவ்வொரு செல்வாக்கும் இந்த நாட்டின் ஜனநாயகத்தை அழிக்கும் பாரிய சதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் மாற்று அரசும் முற்போக்கான எதிர்க்கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தடைகள் மற்றும் சமன்பாடுகள், அதிகாரப் பகிர்வு போன்ற கருத்துக்களின் மூலம் ஜனநாயகத்தின் 3 தூண்களான சட்டமன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறையைப் பலப்படுத்தி நாட்டு மக்கள் சார்பாக நாட்டின் உச்ச சட்டத்தின் பாதுகாவலர்களாகச் செயற்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் நீதிமன்றத்தின் நீதிபதிகளால் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளையும் பாதுகாப்பதற்காக மக்கள் பிரதிநிதிகளாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன் நிற்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...