tamilni 37 scaled
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலிற்கு ஏன் இந்த நிலை! தேடுவாரற்றுக் கிடக்கும் ஈழத் தமிழரின் அடையாளம்

Share

முள்ளிவாய்க்காலிற்கு ஏன் இந்த நிலை! தேடுவாரற்றுக் கிடக்கும் ஈழத் தமிழரின் அடையாளம்

முள்ளிவாய்கால் என்பது ஈழத் தமிழ் மக்களின் ஒரு வரலாற்று அடையாளம். பற்பரிமானத் தியாயங்களின் ஒரு அழிக்கமுடியாத உறைவிடம்.

அந்த உறைவிடத்தின் அடையாளத்தை தமிழ் இனத்தின் எதிரிகளே அழிக்க முற்பட்டுக்கொண்டிருக்கும் தருணங்களில், தமிழ் இனமே அதனை அழிக்கவும், மறைக்கவும் முற்படுகின்றதா என்கின்ற கேள்வி எழுக்கூடியவகையில் முள்ளிவாய்கால் நினைவுத்திடலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியும் தற்பொழுது காட்சிதந்துகொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலும், தூபியும் தேடுவாரற்றுக் கிடப்பது கவலையளிப்பதாகவே இருக்கின்றது.

நூற்றைம்பதாயிரம் மக்களை பலியெடுத்து முற்றுப்பெற்ற இந்த நிலத்தில் நடைபெற்றது இனவழிப்புத் தான் என்று உலகெங்கும் வாதாடி நிறுவ முயன்று கொண்டிருக்கும் தமிழினம், தான் வீழ்ந்த இடத்தை மறந்து போகும் பேராபத்தை எதிர்கொண்டிக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை தேடி அலைந்து தான் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் வரும் எவரொருவரும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை பார்த்தே போகவேண்டும்.

இல்லை குறைந்தபட்சம் அது பற்றிய அறிவோடு அதை அறிந்து கடக்க வேண்டும்.

இந்த சிந்தனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்யும் ஒழுங்குபடுத்தல் ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டும்.

அது இருப்பதாக தெரியவில்லை.

ஆலயங்களுக்கொரு பரிபாலனை சபை போல முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கான ஒரு பொது நிர்வாக சபையை உருவாக்குதல் ஏற்புடையதாகும். நினைவை அனுசரிப்பதோடு கடந்து போகாது வீழ்ந்த இடத்திலிருந்து எழுந்து கொள்ள ஆவன செய்து கொள்ளலாம் இந்த சபை மூலம்.

நினைவிடத்திற்கான வழிகாட்டல் பாதை இனம் காட்டிகளை நிறுவுதல் அவசியமானது. நினைவிடத்தில் பெயர்ப்பலகை ஒன்றையும் நிறுவ வேண்டும். அவை சீராகவும் ஒழுங்குமுறையாகவும் பராமரித்தலுக்கான ஏற்பாடுகளும் அவசியமாகும்.

நானூறாண்டுகளாக வீழ்ந்து போயிருந்த தமிழினம் தனக்குள் இருந்த வீரத்தை இனம் கண்டு இந்த உலகுக்கு எடுத்தியம்பிய பெரும் படை சாய்ந்து கொண்ட நிலம் முள்ளிவாய்க்கால்.

மே – 18. எப்படி வீழ்ந்தோம். எப்படி வீழ்த்தப்பட்டோம். ‘தோற்றோம்’ என்பதை ஏற்றோம் என்றால் தோற்ற காரணம் தேடி ஆராய்வோம்.

தோற்றிட காரணங்கள் எவையென தேடி ஆராய்ந்து தவறுகளிலிருந்து எம்மை நாம் திருத்திக்கொள்ள முள்ளிவாய்க்கால் நினைவு எல்லோரிடமும் நித்தம் மீண்டு கொண்டிருக்க வேண்டும்.

இதற்கான ஒரு வழியாக நினைவுத்திடலினை பேணிப்பராமரிப்பதை முன்னெடுக்கும்.

இளையவர்களிடையே தேடலை தூண்டி நாளைக்காக அவர்களது வாழ்வை ஒழுங்கமைத்துக் கொள்ளவும் உதவிடும் வகையில் பணியாற்றிட வேண்டும்.

சுற்று மதில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை சூழ வலுவான சுற்று மதில் ஒன்றை அமைத்து அதன் எல்லைகளை எல்லைப்படுத்துவதோடு சுவரின் மீது நினைவு சுமந்த உணர்வு வரிகளை எழுதி வைத்து விட்டால் நினைவிடத்தை பார்த்துச் செல்ல வருவோருடன் அவை மனதால் பேசி உணர்வில் கலந்து விடும். உலக மக்களிடையேயும் சரி ஈழத்தமிழ் மக்களிடையேயும் தெளிவான பார்வையையும் தமிழர் தாம் ஈழத்தில் சுமக்கும் வலிகளையும் எடுத்தியம்பி நீதிக்கான பாதையை விரைவாக்கும்.

சிங்கள மக்களிடையேயும் மாற்றம் வரும். சிங்கள மக்களிடையேயும் தமிழர் உணர்வுகளை எடுத்தியம்பும். தமிழரின் உயர்ந்த நற்குணங்கள் புரிந்து கொள்ள வைக்கும். புரிந்துணர்வால் தமிழரும் உரிமையோடு வாழத்தான் வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க விதையாகிப் போகும்.

அரசியலாளர்கள் சிங்கள மக்களை அரசியல் இலாபங்களுக்காக தூண்டி இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளினால் இலாபமடையும் போது சிங்கள மக்களை விழித்துக்கொள்ள இந்த முயற்சி வைத்து விடும்.

இறந்தவர்கள் மீதான தமிழரின் அதீத மரியாதை பண்பை உலகறியச் செய்யும். ஆற்றலை வெளிக்காட்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் அமையும் சுற்று மதிலின் ஓரமாக மரங்களை நாட்டி வளர்த்தல், தமிழர் வீரம் பேசும் சிலைகளை ஆக்கி வைத்தல், இறுதி யுத்தத்தின் வலிகளை செதுக்கி வைத்தல் என்று அந்த நிலத்தில் ஒரு அறிவாலயத்தை நினைவாலயத்தோடு பேணிக்கொள்ளலாம்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து சொந்தநாட்டிற்கு வந்து திரும்பும் ஒவ்வொரு தமிழனுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் உணர்வுகளைக் கடத்து ஒரு இடமாக அது மாற்றப்படவேண்டும்.

நினைவு நாளில் கூடிப்பேசி கூட்டங்களை நடாத்தி விளக்கேற்றி விட்டு வருடத்தில் ஏனைய நாட்களில் மறந்து கடந்து போதல் நலமன்று.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...