tamilni 36 scaled
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரை உச்சரிக்க அருகதையற்ற இனவாதிகள்

Share

விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரை உச்சரிக்க அருகதையற்ற இனவாதிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாதிகளுக்கு எந்த அருகதையும் கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய உரிமைக்காகப் போராடிய எங்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் நியாயமான நிலைப்பாடுளை நாங்கள் சுட்டிக்காட்டுவதற்கு தயங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் துதிபாடுவோரை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சிங்களக் கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த கஜேந்திரன் எம்.பி மேலும் குறிப்பிடுகையில்,

சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் மிகக் கீழ்த்தனமான சிங்கள – பௌத்த இனவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றவர்கள். இங்கு ஏனைய இனத்தவர்கள் மதத்தவர்கள் வாழ்வதற்கு அவர்களுக்கு உடன்பாடில்லை. குறிப்பாகத் தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள்.

தங்களைப் போன்ற இனவெறியர்களின் செயற்பாடுகளாலேயே தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள் என்ற உண்மையை இன்று பெரும்பான்மையினத்தவர்களின் தரப்பில் இருந்தே சொல்லப்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

தமிழ்த் தரப்பில் இருந்து உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளி அல்லது கொலை செய்து கதையை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த மூன்று இனவாதிகளும் இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் கருத்து வெளிப்படுத்துகின்றது.

இவர்களின் அச்சுறுத்தல்களுக்குத் தமிழ்ச் சமூகம் அடிபணியப்போவதில்லை. எங்களுடைய உரிமைக்காகப் போராடிய எங்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் நியாயமான நிலைப்பாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...