இலங்கை
கொழும்பில் மழைக்கு மத்தியில் மலர்வலயங்கள் மற்றும் சவப்பெட்டிகளுடன் போராட்டக்காரர்கள்
![கொழும்பில் மழைக்கு மத்தியில் மலர்வலயங்கள் மற்றும் சவப்பெட்டிகளுடன் போராட்டக்காரர்கள் 1 rtjy 10 scaled](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2023/09/rtjy-10-scaled.jpg?lossy=2&strip=1&webp=1)
கொழும்பில் மழைக்கு மத்தியில் மலர்வலயங்கள் மற்றும் சவப்பெட்டிகளுடன் போராட்டக்காரர்கள்
கொழும்பில் சுகாதார அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சியினர் இணைந்து இன்று பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
சுகாதார அமைச்சருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கொட்டும் மழைக்கு மத்தியில் மலர்வலயங்கள் மற்றும் சவப்பெட்டிகளையும் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் தாயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.