rtjy 267 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்!

Share

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் பாவனை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மிகவும் வறண்ட காலநிலையால், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்துள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதாவது, 2023.08.24ஆம் திகதியின் நிலவரப்படி, நீர் வழங்கல் அமைப்புகளுக்கு வழங்கக்கூடிய நீரின் அளவு குறைவடைந்ததால், 11 மாவட்டங்களில் உள்ள 43 நீர் விநியோக அமைப்புகளில் 131,132 நீர் இணைப்புகளுக்கு கொள்கலன்கள் (பவுசர்) மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, பதுளை, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை, அம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராகலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர் வழங்கும் நீர் ஆதாரங்களின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளது.

கண்டி – ஹந்தான பிரதேசத்திற்கு நேர அட்டவணை முறையின் ஊடாக 100 வீத நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நாட்களில் நீர் நுகர்வு படிப்படியாக அதிகரித்து வருவதால், நீர் வழங்கல் அமைப்புகளில் உள்ள பிரதான நீர் தொட்டிகளில் நீரின் அளவு விரைவாக முடிவடைகிறது.

மேலும், கடுமையான வெப்பநிலை காரணமாக, சிலர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிக்கிறார்கள்.

பல நீர் ஆதாரங்கள் வறண்டு கிடக்கும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், வாகனங்களைக் கழுவுதல், குழாய்கள் மூலம் பூக்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் போன்றவற்றைச் சுத்தம் செய்ய வேண்டாம் என்றும் பிரதி பொது முகாமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...