rtjy 263 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகள் விவகாரம்: இந்திய தேசிய புலனாய்வால் மற்றொருவர் கைது

Share

விடுதலைப் புலிகள் விவகாரம்: இந்திய தேசிய புலனாய்வால் மற்றொருவர் கைது

இந்தியா – இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்பில் மற்றொருவரை இந்தியாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (NIA) கைது செய்துள்ளது.

இது தொடர்பில் தமிழகத்தில் வைத்து முக்கிய சந்தேகநபரான லிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சென்னையில் வசிப்பவர், லிங்கம் மற்றொரு குற்றஞ்சாட்டப்பட்ட குணசேகரனின் நெருங்கிய நண்பனாக இருந்துள்ளார்.

அத்துடன் இந்தியாவிலும் இலங்கையிலும் போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்தின் வருமானத்தில் மோசடி செய்வது தொடர்பான சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கும் லிங்கம் முக்கியமானவராக செயற்பட்டு வந்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட லிங்கம், இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதை சட்டப்பூர்வமாக்கும் முயற்சியில் மோசடி உறுப்பினர்களுக்கான போலி அடையாள ஆவணங்களையும் தயாரித்துள்ளதாக என்.ஐ.ஏ விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை இவர்கள், பாகிஸ்தானியரான ஹாஜி சலீம் என்பவரிடம் இருந்து இந்த சட்டவிரோத போதைப்பொருட்களைப் பெற்றனர் என்பதும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 14ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...