வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள 16 வயது பாடசாலை மாணவி!
இலங்கைசெய்திகள்

வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள 16 வயது பாடசாலை மாணவி!

Share

வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள 16 வயது பாடசாலை மாணவி!

சூரியாரா, செவனகல, இந்துனில்புர பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவியை செவனகல வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

சிறுவயதிலேயே தந்தை இழந்த குறித்த மாணவி தாயாருக்கு நிலையான வருமானம் இல்லாத நிலையில் நெலும்சிறிகமவில் உள்ள சிறிய வீடொன்றில் வசித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செவனகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்பத்தில் நிலவும் கடும் நிதி நெருக்கடி காரணமாக குறித்த மாணவி கடும் விரக்தியில் வாழ்ந்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனியார் வகுப்பு ஆசிரியையின் விருந்து வைபவமொன்றில் பங்கேற்க முடியாமல் மாணவி மிகுந்த ஏமாற்றத்தில் இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68fe267ebcb42
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டப் பகுதிகளை காடுகளாக்கி மக்களை வெளியேற்றும் சதி: சந்தேகம் எழுப்பும் யட்டியந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர்

பெருந்தோட்ட பகுதிகளை காடுகளாக்கி அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாகவும்...

1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...