இலங்கை அரசாங்கத்தை எச்சரித்த விடுதலைப் புலிகளின் தலைவர்
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசாங்கத்தை எச்சரித்த விடுதலைப் புலிகளின் தலைவர்

Share

இலங்கை அரசாங்கத்தை எச்சரித்த விடுதலைப் புலிகளின் தலைவர்

நோர்வேயுடனான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு பலேகல பிரதேசத்துக்கு வந்து இலங்கை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உரையாற்றினார், அதில் இன்றைய தினம் எனது ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைக்கிறேன். ஆனால் எனது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பு மீண்டும் எமக்கு ஏற்பட்டால் நாங்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டால் இரத்தக் களறி ஏற்படுத்துவேன் என தெரிவித்தே ஆயுதங்களை கையளித்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் நாட்டின் சட்டம். அதன் மீது சத்தியப்பிரமாணம் செய்தே அனைவரும் நாடமாளுமன்றத்திலும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் இருக்கின்றனர். மாகாணசபை வரப்பிரசாதங்களை மக்கள் பிரதிநிதிகள் மாத்திரம் அனுபவிக்காமல் இலங்கை மக்களும் அதனை அனுபவிக்க வேண்டும். அதனாலே அதனை செயற்படுத்த முயற்சிக்கிறோம்.

அத்துடன் 13ஆம் திருத்தம் மூலம் ஒருபோதும் நாடு பிளவுபடப்போவதில்லை. நாடு பிளவுபடாமல் இருப்பதற்காகவே ஜே.ஆர்.இந்திய இலங்கை திம்பு கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தபோது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இந்தியாவுக்கு சென்று கலந்துரையாடிய பின்னர் ராஜிவ் காந்தி இலங்கைக்கு வந்து ஒப்பந்தம் கைச்சாத்திட்டார்.

வடக்கு – கிழக்கு பகுதிக்கு மாகாண முறையொன்றை அறிமுகப்படுத்துமாறு இந்தியாவின் திட்டத்தில் இருந்தது. ஆனால் பிளவுபடாத நாடொன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஜே,ஆர். அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டு மாகாணசபை முறையை முழு நாட்டுக்கும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

அதேபோன்று ரணில் விக்ரமசிங்க நோர்வேயில் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பிரபாகரன் ஆயுத்தை கீழே வைக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அது சட்டம் அல்ல. அந்த ஒப்பந்தம் இன்று நூலகத்திலேயே இருக்கிறது.

ஒப்பந்தத்தை ஏற்றுக்காெண்டு பிரபாகரன் பலேகல பிரதேசத்துக்கு வந்து இலங்கை தொடர்பில் உரையாடல் ஒன்றை மேற்கொண்டார். அதில் இன்றைய தினம் எனது ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைக்கிறேன். ஆனால் எனது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பு மீண்டும் எமக்கு ஏற்பட்டால் நாங்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டால் இரத்தக் களறி ஏற்படுத்துவேன் என தெரிவித்தே பிரபாகரன் ஆயுதங்களை கையளித்தார்.

அதன் பிரகாரமே வரதராஜபெருமாள் முதலமைச்சராக சத்திய பிரமாணம் செய்தார். அதனால் இந்த வரலாற்றை தெரிந்துகொண்டு அவதானமாக செயற்படவேண்டும்.

அதனால்தான் ரணில் விக்ரமசிங்க அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியுமான பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறார். இதற்கு மாற்றமான நல்ல கருத்துக்கள் இருக்குமானால் அவர்கள் அதனை முன்வைக்க வேண்டும்.

அத்துடன் சங்கரத்ன தேரர்களுக்கு 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தெளிவில்லாமல் இருந்தால் அது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதனால் அரசாங்கம் மஹாசங்க ரத்ன தேர்ரகளுடன் விரைவாக கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களை நீக்க நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Dead Body 1200px 22 12 18
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு – நிமோனியா தொற்றால் மரணம் என தகவல்!

யாழ்ப்பாணம், கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின்...

24 66eb36e41bb99 md
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் 13 நாட்களே ஆன ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு: உடற்கூற்றுப் பரிசோதனையில் காரணம் வெளிச்சம்!

யாழ்ப்பாணம் (Jaffna), அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின், பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை...

25 68f95d9f05e86
செய்திகள்அரசியல்இலங்கை

2026 மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைப்பு: கட்சிக்குள் ஆழமான கலந்துரையாடல்கள் காரணம்!

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை...

25 68f9483b692e2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தேவை: சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்கவின் ஆவேச உரை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இவர் நாவலப்பிட்டியில்...