இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

Share

இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனினால் இந்தியாவில் பாரிய தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலத்தின் மும்மிகாட்டி என்னும் பகுதியில் இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மென்பானங்கள் உள்ளிட்ட பான வகைகளுக்கான அலுமினியம் கான்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலை சுமார் 440 கோடி இந்திய ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட உள்ளதாகவும், சுமார் 26 ஏக்கர்களில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறி கர்நாடக அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இலங்கையில் ஹொரண பகுதியில் இயங்கி வரும் சிலோன் பிவரேஜஸ் கம்பெனி நிறுவனத்தினால் தற்பொழுது 8 அளவுகளில் அலுமினியம் கேன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த மே மாதம் சிலோன் பிவரேிஸ் நிறுவனம் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மென்பான உற்பத்தியொன்றை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...