இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

Share

இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனினால் இந்தியாவில் பாரிய தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலத்தின் மும்மிகாட்டி என்னும் பகுதியில் இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மென்பானங்கள் உள்ளிட்ட பான வகைகளுக்கான அலுமினியம் கான்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலை சுமார் 440 கோடி இந்திய ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட உள்ளதாகவும், சுமார் 26 ஏக்கர்களில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறி கர்நாடக அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இலங்கையில் ஹொரண பகுதியில் இயங்கி வரும் சிலோன் பிவரேஜஸ் கம்பெனி நிறுவனத்தினால் தற்பொழுது 8 அளவுகளில் அலுமினியம் கேன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த மே மாதம் சிலோன் பிவரேிஸ் நிறுவனம் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மென்பான உற்பத்தியொன்றை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...