இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

Share

இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஆயுர்வேத சிகிச்சை மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசா (Ayush Visa) அறிமுகப்படுத்தப்படுவதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சையைக் கையாளும் விசாவில், 11 ஆவது பிரிவுக்குப் பிறகு 11 ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளதுடன், தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய பாரம்பரிய மருத்துவத்தை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதற்கான முயற்சியாகவே சிறப்பு ஆயுஷ் விசா பிரிவை உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஆயுர்வேதம், யோகா, மற்ற பாரம்பரிய சிகிச்சை முறைகள், பாரம்பரிய மருத்துவம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் இந்தியா சென்று மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் ஆயுஷ் விசா முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரபு, ஐரோப்பிய, ரஷ்ய, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளாவுக்கு சென்று வரும் நிலையில் புதிய ஆயுஷ் விசா நடைமுறைக்கு வருவதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 68f95d9f05e86
செய்திகள்அரசியல்இலங்கை

2026 மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைப்பு: கட்சிக்குள் ஆழமான கலந்துரையாடல்கள் காரணம்!

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை...

25 68f9483b692e2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தேவை: சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்கவின் ஆவேச உரை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இவர் நாவலப்பிட்டியில்...

images 1 5
செய்திகள்உலகம்

போர் நிறுத்தம் பின்னணியிலும் நெருக்கடி: கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் நெதன்யாகுவை கைது செய்ய தயார்!

இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது அமைதி ஒப்பந்தம் (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ள...

1761139778 Piumi Hansamali Sri Lanka Ada Derana 6
செய்திகள்இலங்கை

“பத்மே எனது அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தத்தான் சொன்னேன்”: பாதாள உலகத் தொடர்பு குற்றச்சாட்டுக்கு பியூமி ஹன்சமாலி விளக்கம்!

பாதாள உலகக் குழுக்களின் தலைவராகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக...