இலங்கையில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கையில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கையில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த வருடத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

நேற்று (20.07.2023) வரை 714,598 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஜூலை 20 நாட்களில் மட்டும் 90,724 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையாக 15,330 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

10,184 பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 5963 பேரும், ஜேர்மனியிலிருந்து 5141 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டு முழுவதும் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு வந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version