download 26 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஊழல்மோசடிகளின் ஓரங்கம்-சபாநாயகர் கடும் அதிருப்தி!

Share
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் செயற்பாடு, நாட்டின் முக்கிய பிரமுகர் என அழைக்கப்படும் சில தரப்பினரால் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஊழல்மோசடிகளின் ஒரு பகுதியேயாகும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரொருவர் 7 கோடியே 50 இலட்சம் பெறுமதியான மூன்றரை கிலோகிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுகள், ஆபரணங்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவந்தபோது கைதான சம்பவத்தை நாம் மிகவும் பாரதூரமான விடயமாகவே கருதுகின்றோம். இதுகுறித்து விசனமடையும் அதேவேளை, நாடு என்ற ரீதியில் வெட்கப்படவேண்டிய விடயமாகவும் நாம் இதனைக் கருதுகின்றோம்.
‘கௌரவ உறுப்பினர்’ என்று விழிக்கப்படும் ஒருவர் நாட்டின் முதன்மை விமானநிலையத்தின் முக்கிய பிரமுகர்களுக்கான முனையத்தைப் பயன்படுத்திச் செய்திருக்கும் இந்தச் செயலானது, நாட்டின் முக்கிய பிரமுகர் என அழைக்கப்படும் சில தரப்பினரால் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஊழல்மோசடிகளின் ஒரு பகுதி என்றே நாம் நம்புகின்றோம். இச்செயலின் விளைவாகக் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஒட்டுமொத்த பாராளுமன்றத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் கண்ணியம் மிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம்வகிப்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, இவர்களைப்போன்ற நபர்களின் செயல்களால் கண்ணியம் மிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிவுபடுத்தப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மேலும் இந்தச்செயலை வெறுமனே சுங்கச்சட்டத்தை மீறிய செயலாக மாத்திரம் கருதமுடியாது. இதனூடாக நாட்டின் அந்நியச்செலாவணி சட்டங்களும் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்துக் கவனம்செலுத்தவேண்டும். அவ்வாறு மீறப்பட்டிருப்பின், அது பாரிய குற்றமாகும். ஆகையினால் நாட்டின் பொறுப்புடைய தரப்புக்கள் இதுகுறித்துக் கவனம் செலுத்தவேண்டிய அதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரின் தகுதி, தராதரங்களைப் பாராமல் சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
#srilankaNews

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...