image defcd9df25
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆலய உற்சவத்தில் வவுனியா இளைஞன் பலி!

Share

வவுனியா – எல்லப்பர், மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞன் எடுத்துள்ளார்.

இதன் போது வயரியில் மின்சார ஒழுக்கு காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கைப்பட்டமையினையடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே இளைஞர் மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்தில் 29 வயது மதிக்கத்தக்க நா.கபிலன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f495a7c6b1e
செய்திகள்இலங்கை

அரச கிளவுட் செயலிழப்பு: பல அரச இணைய சேவைகள் பாதிப்பு!

இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பச் செயலிழப்பு...

IMG 20241217 095933 800 x 533 pixel
செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தி சார்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைப்பதற்கான...

AP20222207925030
செய்திகள்இலங்கை

“மக்களுடனான பிணைப்பே ஆரோக்கியத்தின் ஆதாரம்” – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

தங்காலை, கால்டன் இல்லத்தில் இருந்தவாறு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...