இலங்கை
சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு!
சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்தே கைக்குண்டு ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார். இதையடுத்து வைத்தியர் கைக்குண்டை எடுத்துக்கொண்டு சாவகச்சேரி தம்பதோட்ட இராணுவ முகாமிற்கு சென்று அந்த கைக்குண்டை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பாக இராணுவத்தினரால் சாவகச்சேரி பொலிசாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபர் மாயம்! - tamilnaadi.com