er
இலங்கைசெய்திகள்

நாட்டில் ஆணுறை விற்பனை அதிகரிப்பு!!

Share

வழக்கத்துக்கு மாறாக நாடு முழுவதும் ஆணுறைகள் அதிகமாக விற்பனையாவதாக இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம் (FPA) தெரிவித்துள்ளது.

குறித்த ஒரு தர அடையாளத்தின் (brand) ஆணுறைகள் தொலைதூரப் பிரதேசங்களிலும் வேகமாக விற்பனையாவதாக FPA இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷாரா ரணசிங்க டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

கருத்தரித்தலில் இருந்து மட்டுமன்றி பாலினம் மூலம் கடத்தப்படும் நோய்களிலிருந்தும் ஆணுறைகள் இரண்டு வழிகளில் பாதுகாப்பு செய்கின்றன. எமது இளைய சமுதாயத்தை பாதுகாக்க ஆணுறைப் பயன்பாடு ஒரு சிறந்த வழியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்னும்,  சில கலாச்சார நம்பிக்கைகளால் மக்கள் ஆணுறைகளை வாங்குவதற்குத் தயங்குகின்றனர்.

பரபரப்பான பகுதிகளான புகையிரத நிலையம், மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பொருள் வழங்கும் தன்னியக்க இயந்திரங்களினூடாக (vending machine ) ஆணுறைகளைப் பெறக்கூடிய வழிமுறையை முன்னெடுக்க FPA முன்வந்த போதும் அதற்கான அனுமதிகளைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளது.

ரணசிங்கவின் கூற்றுப்படி, இலங்கை கிட்டத்தட்ட 68 சதவீத கருத்தடை பரவல் வீதத்தைக் கொண்டுள்ளதுடன் பிராந்தியத்தில் மிக உயர்ந்த கருத்தடைப் பரவல் வீதத்தையும் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...