paffrel
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை!!

Share

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமைக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதியன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை என்று சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவத்த பஃப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

அரசாங்கம் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் நீதிமன்ற தீர்ப்புகளைக்கூட புறக்கணிக்கும் நிலையில் இருப்பது வருந்தத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் சமநிலை இப்போது முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்த சதி செய்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் நீதிமன்றத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி தற்போது சட்டமன்றமும் தேர்தலை தாமதப்படுத்தச் செயல்படுவதாக குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...