image 5f00dc0fad
அரசியல்இலங்கைசெய்திகள்

நீதித்துறைக்கு சுதந்திரம் இல்லை!!

Share

பிரேமநாத் சி.தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமைக் கேள்விகள் நீதித்துறையின் சுயாதீனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஊடக அறிக்கை மூலம் உறுதியளித்துள்ளது.

நீதிமன்ற சுயாதீனம் என்பது இலங்கை மக்களின் உரிமை எனவும் பிரஜை மற்றும் அரசுக்கு இடையிலான மற்றும் பிரஜைகளுக்கு இடையிலான நீதியை உறுதிப்படுத்துவதற்கு சுதந்திரமான நீதித்துறை அவசியம் என்பதை அனைத்து அரச நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திறைசேரி செயலாளர் மீதான உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி பிரேமநாத் சி.தொலவத்த சிறப்புரிமை கேள்வி எழுப்பினார்.

இது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்தே  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், இவ்விடயம் குறித்து எதிர்க்கட்சிகளும் அச்சம் தெரிவித்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...