sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியலமைப்பை மீறுவதை அனுமதிக்க முடியாது!

Share

“தனிப்பட்ட ஒருவரின் நிலைப்பாட்டுக்காக அரசியலமைப்பை மீறுவதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேர்தல் “எப்போது நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது” என்றார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

கீழ் மட்ட ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் முக்கிய இடமே உள்ளூராட்சி சபைகள். அதனைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். இப்போதும் மாகாண சபைகள் செயற்படாத நேரத்தில்,

அவை நிறைவேற்று கரங்களுக்குள் இருக்கும் நேரத்தில், உள்ளூராட்சி தேர்தலையும் நடத்தாது இருப்பது ஜனநாயகத்தை சீர்குலைப்பதாகவே பார்க்கின்றோம்.

உள்ளூராட்சி சபைகள் தேர்தலை நடத்துவதை தடுக்க இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளைப் பார்க்கும் போது அவை ஜனநாயகத்துக்கான அடியாகவே உள்ளன.

உள்ளூராட்சி சபைகள் மூலம் மக்களுக்கு சேவைகள் கிடைக்கின்றன. 4 வருடங்களுக்காக அவை செயற்படுகின்றன. ஒரு வருடத்துக்கு உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை அதிகாரித்தாலும் அதன் பின்னர் நீடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...