Education 2
இலங்கைசெய்திகள்

மாணவர்கள் நலனை கருத்திற் கொண்டு ஒத்துழையுங்கள்

Share

க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் விடைத்தாள்களை மதிப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, ஆகையால், மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்  சுசில் பிரேம்ஜயந் கேட்டுக்கொண்டார்.

விடைத்தாள்களை மதிப்பிடும் நடவடிக்கைகளுக்காக 20,000 ஆசிரியர்கள் அவசியமாக உள்ள நிலையில், 16,000 ஆசிரியர்களே இதுவரை அதற்காக பதிவு செய்துள்ளனர்.

மேலும் 4,000 ஆசிரியர்களுக்கான குறைபாடு நிலவுகின்றது என்றார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை  இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில்  எதிர்க்கட்சி எம்பி புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே   இவ்வாறு வேண்டுகோள் விடுத்த கல்வி அமைச்சர் மேலும் கூறுகையில்,

அவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழமையாக வழங்கப்படும் கொடுப்பனவிலிருந்து சுமார் இரண்டு மடங்காக வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...