dinesh gunawardena 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிட போவதில்லை!!

Share

தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும்.தேர்தல்கள்  ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் நாம் தலையிட போவதில்லை என தெரிவித்த என பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான  தினேஷ் குணவர்தன, உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவுக்கு அமைய அரச அதிகாரிகள் செயற்படுவார்கள் என்றார்.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவு பெறும். உள்ளூராட்சிசபைத்  தேர்தல் வாக்கெடுப்புக்கான புதிய திகதி அறிவிப்புக்கு 21 நாள் காலவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
.
பாராளுமன்றத்தில் நேற்று (07) செவ்வாய்க்கிழமை  நிலையியற் கட்டளை   கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே   இவ்வாறு தெரிவித்த  பிரதமர் மேலும் கூறுகையில்,

தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் கூடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்ட விடயம் அடிப்படையற்றது. ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையும்  தேசிய பாதுகாப்பு சபை கூடுகிறது.

திறைச்சேரியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு செல்வதை தடுப்பதற்காகவே அவர் தேசிய பாதுகாப்பு சபைக்கு அழைக்கப்பட்டுள்ளார்  என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுவதும் அடிப்பமையற்றது. தேசிய பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை மறுக்க முடியாது என்றார்.

தேர்தல் ஆணைக்குழு விடுத்த அழைப்பு தொடர்பில் திறைச்சேரியின் செயலாளர் ஆணைக்குழுவுடன் பேசி ஒரு தீர்மானத்தை எடுப்பார் என்றார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிசபைகள் அமைச்சர் என்ற ரீதியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன்.

தேர்தல் திருத்தச்சட்டம்,தொடர்பில்  தேர்தல்கள் ஆணைக்குழு பல யோசனைகளை முன்வைத்துள்ளது.சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் – என்றார்.

கட்டுப்பணம் ஏற்றல் பணியில் இருந்து மாவட்ட செயலாளர்களை விலகிக் கொள்ளுமாறு அறிவிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை எடுக்கவில்லை.தவறுதலாக வெளியிட்ட அறிக்கையை பொதுநிர்வாக அமைச்சர் மறுகணமே திருத்திக்கொண்டார்.தேர்தல் செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவு பெறும். உள்ளூராட்சிசபைத்  தேர்தல் வாக்கெடுப்புக்கான புதிய திகதி அறிவிப்புக்கு 21 நாள் காலவகாசம் வழங்கப்பட வேண்டும்.தேர்தல்தொடர்பில் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்,தேர்தல்கள்  ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிட போவதில்லை என்றார்.

உள்ளூராட்சிசபைத் தேர்தல்,மக்களின் ஜனநாயக வாக்குரிமை தொடர்பில் தற்போது போர்கொடி தூக்குபவர்கள் மாகாண சபைத் தேர்தலை மறந்து விட்டார்கள்.கடந்த அரசாங்கம்  மாகாண சபை திருத்தச்சட்டத்தை உருவாக்கி மாகாண சபைத் தேர்தலை முழுமையாக இல்லாதொழித்துள்ளது.ஆகவே மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு தற்போதைய எதிர்க்கட்சிகள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....