depositphotos 47582093 stock illustration warning stamp
இலங்கைசெய்திகள்

வாகன உரிமையாளர்களுக்கு 15 நாட்கள் அவகாசம்!!

Share

மேல்மாகாணத்தில் இயங்கும் 50 வீதமான பயணிகள் போக்குவரத்து பஸ்களால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்செயலாக தெரிவு செய்யப்பட்ட கொழும்பு பஸ்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இவ்வாறான பேருந்துகளையும் வாகனங்களையும் தனித்தனியாக அடையாளம் காணும் வேலைத்திட்டம் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அடையாளம் காணப்பட்ட வாகனங்களின் வருவாய் உரிமம் கையகப்படுத்தப்பட்டு, குறைகளை நிவர்த்தி செய்ய 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்றும், ஒரு மாதத்திற்கு மேலாக குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச் சூழல் மாசடைவதோடு, பொதுமக்களும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகவும், கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...