WhatsApp Image 2023 01 29 at 10.08.27 PM e1675010478603
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சங்கத்தானை விபத்தில் குடும்பஸ்தர் பலி!!!!

Share

சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ( சாவகச்சேரி இந்து கல்லூரி அருகாமையில்) இன்று மாலை 05.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி நகரில் இருந்து சங்கத்தானை நோக்கி மோட்டார் வண்டியில் வருகை தந்த குறித்த நபர், A9 வீதியின் வலது பக்கமாக திரும்ப முற்பட்ட வேளையில் அவரின் பின்னால் வந்த மோட்டார் வண்டி மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த குறித்த நபர் அங்கு நின்ற இளைஞர்களால் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சங்கத்தானை,சாவகச்சேரியை சேர்ந்த சண்முகலிங்கம் பிரதாப் (வதனி ஜூவலரி கொடிகாமம் உரிமையாளர் மகன்) என்பவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றைய நபர் சிறிய காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2023 01 29 at 6.59.01 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...