30e3c3e2 b3895777 urea
இலங்கைசெய்திகள்

உரத்துக்கு தட்டுப்பாடே இல்லை!

Share

விவசாய அமைச்சுக்கு சொந்தமான உரக் களஞ்சியசாலைகள் அனைத்தும் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிவித்த விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று (05) முதல் அனைத்து உரங்களும் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதற்கிணங்க, ஒரு ஹெக்டேயருக்கு 157.5 கிலோ கிராம் யூரியா உரம் ஒரே தடவையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானிய விலையில் உரம் வழங்குவதற்கு அரசாங்கம் 18,000 மில்லியன் ரூபாயை செலவிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இயற்கை உரங்களை கொள்வனவு செய்யும் விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் மானியம் அடிப்படையில் உரத்தை வழங்குவற்கு அரசாங்கம் சுமார் 16,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மூன்று உரக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஒரு கப்பலில் 41,876 மெற்றிக் தொன் உரமும், மற்றைய கப்பலில் 16,000 மெற்றிக் தொன் யூரியாவும் மற்றுமொரு கப்பலில் 9,300 மெற்றிக் தொன் யூரியாவும் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...