30e3c3e2 b3895777 urea
இலங்கைசெய்திகள்

உரத்துக்கு தட்டுப்பாடே இல்லை!

Share

விவசாய அமைச்சுக்கு சொந்தமான உரக் களஞ்சியசாலைகள் அனைத்தும் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிவித்த விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று (05) முதல் அனைத்து உரங்களும் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதற்கிணங்க, ஒரு ஹெக்டேயருக்கு 157.5 கிலோ கிராம் யூரியா உரம் ஒரே தடவையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானிய விலையில் உரம் வழங்குவதற்கு அரசாங்கம் 18,000 மில்லியன் ரூபாயை செலவிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இயற்கை உரங்களை கொள்வனவு செய்யும் விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் மானியம் அடிப்படையில் உரத்தை வழங்குவற்கு அரசாங்கம் சுமார் 16,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மூன்று உரக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஒரு கப்பலில் 41,876 மெற்றிக் தொன் உரமும், மற்றைய கப்பலில் 16,000 மெற்றிக் தொன் யூரியாவும் மற்றுமொரு கப்பலில் 9,300 மெற்றிக் தொன் யூரியாவும் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...