30e3c3e2 b3895777 urea
இலங்கைசெய்திகள்

உரத்துக்கு தட்டுப்பாடே இல்லை!

Share

விவசாய அமைச்சுக்கு சொந்தமான உரக் களஞ்சியசாலைகள் அனைத்தும் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிவித்த விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று (05) முதல் அனைத்து உரங்களும் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதற்கிணங்க, ஒரு ஹெக்டேயருக்கு 157.5 கிலோ கிராம் யூரியா உரம் ஒரே தடவையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானிய விலையில் உரம் வழங்குவதற்கு அரசாங்கம் 18,000 மில்லியன் ரூபாயை செலவிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இயற்கை உரங்களை கொள்வனவு செய்யும் விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் மானியம் அடிப்படையில் உரத்தை வழங்குவற்கு அரசாங்கம் சுமார் 16,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மூன்று உரக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஒரு கப்பலில் 41,876 மெற்றிக் தொன் உரமும், மற்றைய கப்பலில் 16,000 மெற்றிக் தொன் யூரியாவும் மற்றுமொரு கப்பலில் 9,300 மெற்றிக் தொன் யூரியாவும் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...