இலங்கை
பரீட்சை காலத்தில் மின்வெட்டு இல்லை?
க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால், அக்காலப்பகுதியில் மின் துண்டிப்பு மற்றும் மின் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த நேற்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மின்கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது தொடர்பில் நெகிழ்வுத்தன்மை கடைபிடிக்கப்படுவதன் அவசியத்தை அமைச்சரவை மற்றும் மின்சார சபையிடம் முன்வைக்கயிருப்பதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
புதிய ஆசிரிய நியமனங்கள் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், வருட இறுதியில் ஏற்படவிருக்கும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login