இலங்கை
அலுவலக ஊழியர்களுக்கு மட்டுமே ஆடைக் கட்டுப்பாடு!


அரசு அலுவலகங்களில் எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாடு சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றறிக்கை குறித்து பல தரப்பினர் பகிர்ந்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இதை தெரிவித்தார்.
மேலும் பாடசாலைக் ஆசிரியர்கள், ஆடைகளை அணிவது குறித்து கல்வி அமைச்சு தனது முடிவை அறிவிக்க வேண்டும்.
இந்த சுற்றறிக்கை அலுவலக ஊழியர்களுக்கு மட்டுமே ஆடைக் கட்டுப்பாடு பொருந்தும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.