WhatsApp Image 2022 04 02 at 3.59.07 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுடன் இணைகிறது இ.தொ.கா!

Share

அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) விருப்பம் தெரிவித்துள்ளது.

இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இணைவது என்பது இ.தொ.காவுக்கு வழங்கப்படும் அமைச்சினை பொறுத்தது என்று அவர் கூறியுள்ளார்.

மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் உதவ முடியும் என தமது கட்சி கருதுவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான அரசாங்கத்தில் இ.தொ.கா, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுமா என வினவியதற்கு, அவ்வாறான சாத்தியக்கூறுகள் சாத்தியமில்லை என ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ மீது தனக்கு மரியாதை இருக்கும் அதே வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையேயான அரசியல் தொடர்பு தற்போது முடிந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு...

10 17
இலங்கைசெய்திகள்

இஷாராவை புகழ்ந்து பாராட்டும் பிரதி அமைச்சர்

அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும்...

9 15
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி – வெளிநாட்டில் சுற்றிவளைக்கப்படும் மற்றுமொரு குழு – கலக்கத்தில் 25 பேர்

அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

8 16
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி கைது : முக்கிய விசாரணைக்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

இஷாரா செவ்வந்தி மற்றும் 5 சந்தேகநபர்களை 72 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸாருக்கு...